சிறிலங்கா கிரிக்கெட் உபதலைவராக மீண்டும் திரு மதிவாணன்

சிறிலங்கா கிரிக்கெட் இணை உபதலைவர்களில் ஒருவராக திரு மதிவாணன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவரோடு திரு ரவின் விக்கிரமரட்ண அவர்களும் இணை உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆகக்கூடிய 83 வாக்குகளை பெற்ற சாமினி சில்வா சிறிலங்கா கிரிக்கெட்டின் தலைமையை கைப்பற்றினார்.

தொடர்ந்து திரு ரவின் மற்றும் திரு மதிவாணன் ஆகியோர் முறையே 82 மற்றும் 80 வாக்குகளை பெற்று இணை உபதவைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் முன்னாள் அணித்தலைவர் திரு அர்ஜுன ரணதுங்க அவர்கள் பெற்ற 72 வாக்குகளை முறியடித்தே வெற்றிபெற்றிருந்தார்கள்.

திரு மதிவாணன் அவர்கள் ஏற்கனவே சிறிலங்கா கிரிக்கெட்டில் பதவி வகித்திருந்தவர் . இவர் தொடர்ச்சியாக தன் பணி தொடர வாக்குகளால் வெற்றிபெற்ற தமிழனாக திகழ்கிறார்.

இவர் ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *