வெடுக்குநாறி ஆலயத்தில் மிகச்சிறப்புடன் நடைபெற்ற 10ம் நாள் பொங்கல்

வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் மக்களின் வெடுக்குநாறி ஆலயத்தின் பொங்கல் விழா நிறைவு நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.கடந்த 10 நாள்களாக இடம்பெற்று வந்த பொங்கல் நிகழ்வுகளின் நிறைவுநாள் இன்று ஏராளமான பக்தர்கள் வருகையோடு மிக பக்திபூர்வமாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட மக்கள் மட்டுமல்லாது முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர்.

மக்களோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டத்தரணிகள்,மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் விசேடமாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *