பேராதனை தமிழ்துறை தலைவராக பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராக பேராசிரியர் ஸ்ரீவரதராஜன் பிரசாந்தன் பதவியேற்கவுள்ளார்.வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தில் தன் பதவியை ஏற்கவுள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் மண்ணை பிறப்பிடமாகக்கொண்ட பேராசிரியர் அவர்கள் யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.பாடசாலைக் காலத்திலிருந்து தமிழ்த்துறை சார் அனைத்து விடயங்களிலும் முன்னிலை பெற்றுத்திகழ்ந்த பேராசிரியர் அவர்கள் கொழும்பு கம்பன் கழக மற்றும் தமிழ்ச்சங்க மேடைகளில் பல பேருரைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார்.

பேராதனை பல்கலையில் கல்வி கற்று அதே பல்கலையில் தன் துறையில் தமிழ் தலைவராகும் பெருமைக்குரியவர்களில் ஒருவராகிரார் பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன் அவர்கள்.வெற்றி நடை இணையத்தளம் இன்னும் பல வெற்றிகள் காண வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *