வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் யாழில்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் இதுவரை பதிவு செய்யப்பட்ட  9 அணிகள் பங்குபற்றும்  வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் பெருமெடுப்புடன் நடைபெற ஏற்படாகிறது.

வரும் 30 ம் திகதி ஆரம்பிக்கவிருக்கும் இந்த போட்டிகளில் வடக்கு கிழக்கு மாகாண தலை சிறந்த உதைபந்தாட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இந்த போட்டிகள் அமையும் என்று எதிர்வுகூறப்படுகிறது.

அண்மையில் பிறீமியர் லீக் வெற்றிக்கிண்ண அறிமுகம் மற்றும் அணிகளை ஒப்பந்தம் செய்யும் நிகழ்வுகள் யாழ் ரில்கோ விடுதியில் நடைபெற்றது. முதல் போட்டியில் ஐபிசி தமிழின் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து றிங்கோ ரைய்ரன்ஸ் அணியும் மோதவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில் பங்குபற்றவுளள அணிகள் இவை.

நோதர்ன் எலைய்ட் ஏப்.சி விளையாட்டு கழகம் – உடுப்பிட்டி

கிளியூர் கிங்ஸ் விளையாட்டு கழகம் – கிளிநொச்சி மாவட்டம்

றிங்கோ ரைய்ரன்ஸ் விளையாட்டு கழகம் – திருகோணமலை மாவட்டம்

வவுனியா வொரியஸ் விளையாட்டு கழகம் – வவுனியா மாவட்டம்

மன்னார் ஏப்.சி விளையாட்டு கழகம் – மன்னார் மாவட்டம்

வல்லை ஏப்.சி விளையாட்டு கழகம் – வடமராட்சி

முல்லை ஃபீனிக்ஸ் விளையாட்டு கழகம் – முல்லைத்தீவு மாவட்டம்

ரில்கோ காங்கிரஸ் விளையாட்டு கழகம் – யாழ்ப்பாண மாவட்டம்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *