ரணில் வென்றார்

சிறிலங்காவின் பிரதமர் ரணிலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மகிந்த சார்பு கூட்டு எதிரணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டு ரணில் வென்றார். வாக்கெடுப்பில் 122 வாக்குகள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும் 76 வாக்குகள் ஆதரவாகவும் விழுந்தன.27 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தவிர்க்க வெற்றி ரணில் பக்கம் உறுதியாகியது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராகவே தங்கள் வாக்குகளை பதிவுசெய்தனர். இங்கு ஜேவிபி பிரேரணையை ஆதரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலிடம் தமிழ் மக்களுக்கான நலன் சார்ந்து பல உறுதி மொழிகளை எழுத்தில் பெற்றே இந்த ஆதரவை கொடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

 

http://www.vetrinadai.com/featured-articles/tna-meeting-for-safe-the-position-for-ranil/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *