“நலந்தானா” மருத்துவ ஆலோசனை நிகழ்வு

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்களுக்கு மருத்துவ ஆலோசனையின் தேவையறிந்து UKTSU அமைப்பினரால் “நலந்தானா” நிகழ்வு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படவிருக்கிறது.மார்ச் மாதம் 31 ம் திகதி சனிக்கிழமை லண்டனில் ஈலிங் கனக துர்க்கை ஆலயத்தில் மதியம் 1 மணி தொடக்கம் நடைபெற இருக்கிறது.

இங்கிலாந்தின் இளையோரின் அமைப்புகளில் முக்கிய அமைப்புகளில் ஒன்றான பிரித்தானிய இளையோர் அமைப்பு  முன்னெடுக்கும் இந்த முன்னேற்பாடான செயற்பாடு பலராலும் பாராட்டப்படுகிறது.

பல்கலைக்கழக நடப்பு மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ தகுதி பெற்று வெளியேறிய இளைய மருத்துவர்களும் இணைந்து இந்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆகக்கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கும் அல்லது விழிப்புணர்வு  அவசியம் தேவைப்படும் அனைத்து நோய் நிலைகளுக்குமான ஆலோசனை வழங்கப்படவிருக்கிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

http://www.vetrinadai.com/featured-articles/water-day-2018-nature-for-water/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *