நாளை உனதே!!!

வீறு கொண்டு எழுந்திடு…


வியர்வை சிந்தி உழைத்திடு…

விடியலை உனதாக்கு…


உன் உழைப்பை பெரிதாக்கு…

அச்சமின்றி வாழ்ந்திடு …


அகிலம் போற்ற உயர்ந்திடு…

சீருகின்ற சிங்கங்களே !


சிகரம் தொட எழுங்களே!


போகும் பாதை முள்ளென்றாலும்

சேரும் இடம் சொர்க்கமாகும்…

இன்று இருளானாலும்

நாளைய உனது ஒளியாகும்…!

எழுதுவது : மா. அனுசுயா
முதுகலை முதலாமாண்டு தமிழ் மாணவி,
ஆத்தூர், சேலம்,