பின்லாந்து ஆராய்ச்சியாளர்களின் கொரோனாத் தடுப்பு மருந்தை மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தலாம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு விதமான கொரோனாத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவைகளில் மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தப்படுபவைகள் பிரத்தியேகமான பாதுகாப்பைக் கொடுப்பவை என்று கருதப்படுகிறது. 

அப்படியான ஒரு மூக்குத் திவலைகளாலான மருந்தை பின்லாந்தைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகம், ஹெல்சிங்கி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாகத் தெரியவருகிறது. அந்தத் திவலைகளை மிருகங்களில் பரிசீலித்து வெற்றிகரமான விளைவைக் கண்டிருக்கிறார்கள். 

அடுத்த கட்டமாக அவைகளை மனிதப் பாவிப்புக்குப் பரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக அவ்வாராய்ச்சியாளர்களில் ஒருவரான கல்லே சக்செலா தெரிவிக்கிறார். 

“கொரோனாக் கிருமிகள் சுவாசவழியின் வாயிலாகவே பெரும்பாலும் பரவுகின்றன. அவை எங்கள் சுவாசவழியையே முக்கியமாக பாதித்து அதன் வழியாக மற்றைய அவயவங்களைச் செயலிழக்க வைக்கின்றன. அதனால் மூக்கின் திவலையாக அவைகளைச் சீறிவிடுவதன் மூலம் நோயிலிருந்து பலமான பாதுகாப்புக் கிடைக்கிறது,”என்கிறார் கல்லே சக்செலா.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *