4,500 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு நீங்கள் கொவிட் 19 கிருமிகளை விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளத் தயாரா?

முதன் முதலாக “மனித சவால்” திட்டமொன்றின் மூலம் கொவிட் 19 வியாதியை முழுவதுமாகப் புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியொன்று பிரிட்டனில் நடக்கவிருக்கிறது. அதில் பங்குபற்றத் தயாராக இருக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும்  4,500 பவுண்டுகள் சன்மானமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆராய்ச்சிக்காக பிரிட்டிஷ் அரசால் 33.6 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதில் பங்கெடுக்க 18 – 30 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமானவர்கள் மட்டும் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் போன்றவைகளோ மற்றைய கொவிட் 19 க்கு பலவீனமான வியாதிகளோ இருக்கலாகாது. 

இந்த ஆராய்ச்சி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றத் தேவையான அதி குறைந்த அளவில் கொடுக்கப்படுவதுடன் ஆரம்பமாகும். அதையடுத்துப் பங்கெடுப்பவர் 17 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருப்பார். அச்சமயத்தில் அவர் நண்பர்களையோ, உற்றார் உறவினரையோ சந்திக்க அனுமதிக்கப்படமாட்டார். அந்த நாட்கள் முடிந்தபின்பு பரிசோதிக்கப்படுபவரின் உடல்நலம் அவ்வப்போது மருத்துவர்களால் கண்காணிக்கப்படும்.

இப்பரிசோதனையில் எவராவது கொவிட் 19 நோயால் பாதிக்கப்படுவாராகில் அவருக்கு Remdesvir மருந்து பாவிக்கப்படும். ஆயினும், இதில் பங்குபற்றுகிறவர்களுக்கு நோய் ஏற்படாது என்றே ஆராயும் மருத்துவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *