பாரீஸ் நண்பர்கள் வெற்றிக்கிண்ணம் – அரியாலை ஐக்கிய கழகம் சம்பியன்

அணிக்கு எழுவர் கொண்ட போட்டியாக பாரீஸ் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 23ம் திகதி ஒகஸ்ட் மாதம் பாரீஸ் பக்கட்டல்(Bagatelle) மைதானத்தில் நடைபெற்றது.

நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று,நிறைவில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.

மூன்று பந்து பரிமாற்றங்களை கொண்ட இந்த சுற்றுப்போட்டியில் மொத்தமாக 16 அணிகள் பங்குபற்றியிருந்தன.

மிக வேகமாகவும் சிறப்பாகவும் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த சுற்றுப்போட்டி, முதற்சுற்றுப் போட்டிகள் குறிப்பிட்ட நேரகாலத்துக்கு நிறைவுகாண, இறுதிப்போட்டியில் யாழ்ற்றன் அணியை எதிர்த்து அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகம் மோதியது.நிறைவில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் யாழ்ற்றன் அணியை வெற்றிகொண்டு வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம்

சுற்றுப்போட்டியில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக யாழ்ற்றன் அணியின் கேதீஷ் தெரிவாகியிருந்தார்.ஆட்ட நாயகனாகவும் ஆட்ட தொடர் நாயகனாகவும் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர் காண்டீபன் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ற்றன் விளையாட்டுக்கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *