வலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்

வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

மைதானத்தில் ஆரம்பம் முதலே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய நெல்லியடி மத்திய கல்லூரி இறுதியாட்டத்தில் உடுத்துறை மகா வித்தியாலத்தை எதிர்கொண்டது.

தங்கள் கள மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்திலும் நெல்லியடி மத்திய கல்லூரி 5:1 என்ற கோல் கணக்கில் மிகப்பெரிய வெற்றிச்சாதனையை பதிவு செய்தது.

இதன்மூலம் நெல்லியடி மத்திய கல்லூரி யாழ் மாவட்ட மட்ட போட்டிகளுக்கு வடமராட்சியின் 20 வயது ஆண்கள் பிரிவில் முதல்தர அணியாக பங்குபற்றவுள்ளது.

அதேவேளை உடுத்துறை மகா வித்தியாலயமும் யாழ் மாவட்ட நிலைப்போட்டிகளில் பங்குபற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *