பரம்பொருள்

கனவுகள் இல்லாத
கண்களும் இல்லை


உணர்வுகள் இல்லாத
உயிரும் இல்லை


பிரிவுகள் இல்லாத
உறவுகள் இல்லை


நட்பு இல்லாத
இதயமும் இல்லை


சிற்பங்கள் இல்லாத
கோவில் இல்லை


சண்டைகள் இல்லாத
குடும்பங்கள் இல்லை


மீன்கள் இல்லாத
ஆறுகள் இல்லை


தோல்விகள் இல்லாத
வெற்றிகள் இல்லை


கஷ்டம் இல்லாத
வாழ்க்கை இல்லை


பரம்பொருள் இல்லையேல் இவ்வுலகமே இல்லை

எழுதுவது : க. சித்ரா B.sc.,B Ed.,
ஈரோடு.