சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’| அம்பையின் சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்திய அக்டமி விருது

‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்கிற சிறுகதைத் தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்திய அக்கடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் அம்பை எழுதிய நூல்களில் ஒன்று இது. பெண்ணியத்தின் குரலாக நவீன அம்சங்களை கதைகளில் புகுத்தி வெற்றிகண்ட எழுத்தாளர் இவர்.

இவரின் பல கதைகள் நாடகங்கள் வடிவிலும் மேடைகள் பலகண்டு மக்கள் மத்தியில் இடம்பிடித்தவையாகும்.

கதைகளில் விழிப்புணர்வுக்கருத்துகளை பேசி நாசூக்காக மக்களிடம் அவற்றை எடுத்துச் செல்வதிலும் வல்லவர்.

இவருக்கு இந்த ஆண்டின் சாகித்திய அக்கடமி விருது வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து பலரும் தங்கள் பாராட்டுக்களை எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு சொல்லிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.