“வி என் மதியழகன் சொல்லும் செய்திகள்” நூல் வெளியீட்டு விழா

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் ஒலிபரப்பாளர் வி என் மதியழகன் அவர்களது நூல் வெளியீட்டு விழா   23ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் நடை பெற்றது.கனடாவில் இருந்து கொழும்புக்கு வருகைதந்த வி என் மதியழகன் அவர்கள்  குறிப்பிட்ட நூலை வெளியிடுகிறார். “வி என். மதியழகன் சொல்லும் செய்திகள்” என்ற நூலை வெளியிடும் திரு மதியழகன் அவர்கள் இது இலத்திரனியல் தமிழ் ஊடக வாலாற்றின் செய்தித்துறை கருவி நூலாக அமையும் என்று சொல்கிறார்.

 

இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக அமைச்சர்கள் திரு மனோ கணேசன் மற்றும் திரு சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.குறிப்பிட்ட இந்த நூலுக்காக வாழ்த்துரைகளை  எழுத்தாளரும் கல்வியாளருமாகிய திரு உடுவை தில்லை நடராஜா மற்றும் மூத்த ஊடகவியலாளர் திரு தனபாலசிங்கம் அவர்களும் வழங்கியிருந்தனர்.

 

இவ்விழாவில் இலங்கை ஊடகங்கள் சார்பாக பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.குறிப்பாக வர்ணம் வானொலி நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு நவநீதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். இந்த விழாவானது தமிழ்ச்சங்கத்தில் கலாசூரி ஆர் சிவகுருநாதன் அரங்காக இலங்கை இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் திரு செந்தில்வேலவன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *