அரையிறுதியில் இந்தியா | அவுஸ்ரேலியா தெரிவாகுமா ?

T20 உலகக்கிண்ண போட்டிகளின்
அரையிறுதிக்கான தனது இடத்தை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
இன்றைய  சூப்பர் 8 போட்டியில்  அவுஸ்ரேலியாவை தோற்கடித்த இந்தியா, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.


அவுஸ்ரேலியாவா அல்லது ஆப்கானிஸ்தானா அடுத்தநிலை என்பது , ஆப்கானிஸ்தான்,  பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் போட்டியே தீர்மானிக்கவுள்ளது.

இன்றைய போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடியிருந்தாலும், இந்திய அணியிடம் 18 ஓட்டங்களால் தோல்வியை தழுவியிருந்தது.


முன்னதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி  20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை எடுக்க ,பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 181 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுக்களை இழந்தது.


அதன்படி தோல்வியைத்தழுவி அவுஸ்ரேலிய அணி, இன்றைய அடுத்த போட்டியின் வெற்றி தோல்வியில் தங்கள் அரையிறுதி வாய்ப்பிற்காக தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *