இந்தியாவின் களத்தடுப்பில் சுருண்டது இங்கிலாந்து | இந்தியா – தென்னாபிரிக்கா இறுதிப்போட்டியில்

T20 உலகக்கிண்ணத்திற்கான அரையிறுதிப்போட்டியில், இந்தி அணியின் களத்தடுப்பில் , இங்கிலாந்து அணி ஓட்டங்கள் எடுக்கமுடியுமால் தோற்று வெளியேறியது.

அதன்படி வரு சனிக்கிழமை இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.

இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து  பந்துவீச விரும்பியது .
அதன்படி துடுப்பெடுத்தாடிய இந்தியா மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே தடுமாறி நிறைவில் 17 வது ஓவரில் 103 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து படு தோல்வியடைந்து வெளியேறியது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் சார்பில் பந்துவீச்சில் பிரகாசித்த Axar Patel தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *