கடைசிநிமிடம் கோல் அடித்த இங்கிலாந்தும்| அபார ஆட்டம் ஆடிய ஸ்பெயினும் அடுத்த சுற்றுக்கு

ஐரோப்பியக்கிண்ணத்திற்கான சூப்பர் 16 அணிகளுக்கிடையிலான வெளியேற்றச்சுற்று(Knocked out) போட்டிகளில் இங்கிலாந்தும் ஸ்பெயினும் அடுத்த சுற்றான காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.


பலமாக விளையாடிய ஸ்லொவோக்கிய அணியும்  ஜோர்ஜிய அணியும் துரதிஸ்டமாக தோற்று வெளியேறின.

முன்னதாக இங்கிலாந்தும் ஸ்லொவோக்கிய அணியும் மோதிய போட்டியில் இன்று இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்தது எனக்குறிப்பிடலாம்.
ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரையிலும் 1-0 என்ற கோல்கணக்கில் முன்னணியில் நின்ற ஸ்லோவோக்கிய அணிக்கு, போட்டிக்கான இரண்டாம்பாதி கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடித்து சமனிலைப்படுத்தியது.

குறித்த கோலை அபாரமாக தலைகீழாக அடித்த பெல்லிங்காம் இங்கிலாந்தை காப்பாற்றியிருக்கிறார் என்றுதான் சொல்லலாம்.
அதன் பின்னர் வழங்கப்பட்ட மேலதிக 30 நிமிடத்தில் ஆட்டம் சூடுபிடிக்க  இங்கிலாந்து மேலதிகமாக இன்னுமொரு கோலை அடித்து 2-1 என்ற கோல்கணக்கில்  வெற்றிபெற்றது.


அதேபோலவே ஸ்பெயினும் ஜோர்ஜிய அணியும் மோதிய இன்னொரு போட்டியில் ஜோர்ஜிய அணி முதல் கோலை 18 ஆவது நிமிடத்தில் அடிக்க ஆட்டம் சூடுபிடித்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 4 கோல்களை அடித்து  போட்டிமுழுவதும் ஸ்பெயினின் ஆதிக்கம் தான். அதன்படி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதியானது.

காலிறுதிக்கு தகுதியான இங்கிலாந்து வரும் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து அணியுடனும் , ஸ்பெயின் அணி வரும் வெள்ளிக்கிழமை ஜேர்மனி அணியுடனும் காலிறுதிப்போட்டியில் சந்திக்கவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *