மீண்டும் நாடு திரும்புவார..?

பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பங்கள தேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஷேக் ஹசீனா மீண்டும் நாடு திரும்புவார் என ஷேக் ஹசினாவின் மகன் சஜீப் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது புதிய அரசு தேர்தலை நடத்த முடிவு செய்ததும் அம்மா நாடு திரும்புவார்.எனினும் அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து தெரியவில்லை.தற்போது அம்மா இந்தியாவில் உள்ளார்.எனக்கு அரசியல் ஆசையில்லை.கட்சிக்காக செயற்பட்டு முன்னிலையிலுள்ளேன்.என்று தெரிவித்துள்ளார்.

பங்களதேஸில் இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் காரணமாக ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இந்த போராட்டத்தாள் பலர் உயிரிழந்ததுடன் பலர் காயங்களுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *