வாரத்தில் எத்தனை நாட்கள், கப்பல் சேவையில் ஈடுப்படும்…?

இலங்கை இந்திய நாடுகளுக்கிடையிலான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சேவையான வாரத்திற்கு 3 நாட்களுக்கு மாத்திரம் சேவையில் ஈடுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் படி செவ்வாய், வியாழன்,ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த கப்பல் சேவையில் ஈடுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் சேவைக்கு போதிய மக்கள் இன்மையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையிலும் ,கால நிலை ஒத்துளைக்காமையால் இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *