இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூர்ய நியமனம்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூர்ய நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்றுவிப்பாளர் இல்லாத நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் தற்காலிக பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டிருந்தார்.

இவரின் பயிற்சியின் கீழ்,இந்தியா,நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டிகளில் இலங்கை அணி வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சிவிப்பாளராக சனத் ஜயசூரியவை நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

2026ம் ஆண்டு T20உலக கோப்பை வரை இவர் பயிற்றுவிப்பாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *