இலங்கை இந்திய கப்பல் சேவை இடை நிறுத்தம்..!

வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் நடைப்பெற்று வந்த கப்பல் போக்குவரத்து சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் கப்பல் போக்கு வரத்து சேவை முன்பும் ஓரிரு முறை நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வானிலை சீரானதும் மீண்டும் கப்பல் சேவை இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதிகளவான மக்கள் இந்தியாவிற்கு குறைந்த செலவில் சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *