2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டமானது 25.02.2025 ஆம் திகதியன்று பிரதேச செயலக உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பி.ப 2.00 மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் அம்மணி தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது பிரதேச செயலக உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களால் பிரதேச செயலகத்தின் முதல் காலாண்டுக்கான செயற்பாடுகள் பற்றி முன்னளிக்கை(Presentation) செய்யப்பட்டது.
இக் கூட்டத்திற்கு அவதானிப்பாளர்களாக தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் ரொபட் அலோசியஸ் மற்றும் தேசிய கணக்காய்வு உத்தியோகத்தர் MIF.நபீல் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் A.S சசிகரன்,கணக்காளர் V. நாகேஸ்வரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் A.சுதாகரன், நிர்வாக உத்தியோகத்தர் S.திவாகரன்,பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதோடு கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆகியோரால் கருத்துரைகளும் வழங்கப்பட்டதுடன் கூட்டமானது கணக்காளரின் நன்றியுரையுடன் பி.ப 4.15 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

