இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே சேவையில் பெண்களை நியமிக்க முடிவு

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவையில் பெண்களை நியமிப்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றததில் இன்று (07) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு, அமைச்சின் அமைச்சர்கள் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே சேவையில் பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

பெண்கள் சில நாட்களில் பஸ் ஓட்டுநர்கள், விமானிகள் மற்றும் காவலர்களாக பணியாற்ற முடியும்.

நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாடசாலை பஸ்களை பெண்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற கனவும் எனக்கு உள்ளது…” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *