செய்திகள்

தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்..!

தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இராணுவ அவசர நிலையை அறிவித்த விவகாரம் தொடர்பில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவிக்கு அந்நாட்டின் பிரதமர் ஹான் டக் சூ தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 3ம் திகதி நடைப்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.இதில் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக் சூ போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஹான் டக் சூ ஜனாதிபதி பதவியை இராஜனாமா செய்துள்ளார்.இதன் காரணமாக துணை பிரதமர் சோய் சாங் மோக் தற்காலிக ஜனாதிபதியாக செயற்படுவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *