வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகமும் பால்குடப்பவனியும் விமர்சையாக நடைபெறவுள்ளது

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பேத்தாழையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில், 2025 ஆம் ஆண்டு நாளை 19ஆம் திகதி திங்கள்கிழமை, வருடாந்த சகஸ்ரநாம சங்காபிஷேக பெருவிழா மற்றும் பால்குடப்பவனி நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த விசேட நிகழ்வில், பாலீஸ்வரப்பெருமானுக்கு 1008 சங்குகளாலும், பாலாம்பிகை அம்பாளுக்கு 108 சங்குகளாலும் சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது. அத்துடன், பக்தர்களின் பங்கேற்புடன் பால்குடப்பவனியும் நடைபெறும்.
இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், முன்கூட்டியே தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது.
கிழக்கிலங்கையில் வாழும் அனைத்து பக்தர்களையும், இந்த புனித நிகழ்வில் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றனர்.
