பதிவுகள்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக  தனுஜா முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளராக பணியாற்றிய இலட்சுமணன் இளங்கோவன் கடந்த 06.05.2025 அன்று ஓய்வுபெற்றிருந்த நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது.

தனுஜா முருகேசன் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் மேலதிக செயலாளராக கடமையாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *