வேல்ஸ் ஸ்ரீ கல்ப விநாயகருக்கு நாளை தேர்

வேல்ஸ்ஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ கல்ப விநாயகர் ஆலய தேர்த்திருவிழா உற்சவம் 27ம் திகதி ஜூலைமாதம் நாளை இடம்பெறவுள்ளது.

கடந்த ஜுலை மாதம்  18 ம் திகதி ஆரம்பித்த அலங்கார உற்சவம் வரும் ஜூலை 30ம் திகதிவரை தொடரவுள்ளது. அதன்படி நாளை இடம்பெறும் தேர்த்திருவிழாவும் விமரிசையாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

காலை 7மணிக்கு அபிஷேக பூஜைகளுடன் தொடங்கும் உற்சவ நிகழ்வில் முற்பகல் 11 மணிக்கு தேரேறி வீதிவலம் வரும் காட்சி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த திருவிழாவில் நாதஸ்வர வித்துவான் P S பாலமுருகன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் இணைந்த தவில் நாதஸ்வரக்கச்சேரியுடன் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.

தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து , வரும் ஜூலை மாதம் 28 ம்திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெறவுள்ளது.

வழமை போல வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள அபேரவொன் (Aberavon Beach) கடற்கரையில் தீர்த்தமாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *