மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்..!

இலங்கை இந்தியாவிற்கு இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இரு நாடுகளுக்குமிடையில் கப்பல் போக்கு வரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அடுத்த வாரம் முதல் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் நிமித்தமாக நாளை சிவகங்கை எனும் கப்பல் இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் மக்கள் இலகுவாக தங்களது பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரமும் வளர்ச்சி பெரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *