இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் கப்பல் சேவை..!

இந்திய இலங்கை இரு நாடுகளுக்கிடையிலான கப்பல் போக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக வெள்ளோட்ட நிமித்தமாக சிவகங்கை எனும் கப்பல் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்தது.

பல முறை இந்த சேவை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சில சூழ்நிலைகளால் இடை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் கப்பல் வெள்ளோட்டமாக இன்றைய தினம் வந்தது. எதிர் வரும் 15 ம் திகதி இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம் மேலும் விரிவடையும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இலகுவாக மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *