யார் ‘டீல்’ அரசியல் செய்கின்றார்?

டீல் டீல் என்கிறார்கள் வேலுகுமார் ஒரு எளிமையானவர் என கண்டி மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ,இது தொடர்பாக பலரும் பல கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.இதற்கு பதிலளிக்கும் வகையில் கண்டி மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது,
‘நானும் திகனை பிரதேசத்தில் தான் இருக்கின்றேன் 2 வது.
அவர் அரசியலுக்கு வரும் முன்பே அவருக்கு பணம் இருந்தது. சொத்துக்கள் இருந்தன.
இவர் மக்கள் நன்மைக்காகவே ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினார் அது மக்களுக்கு காலம் சென்று புரியும் பணத்துக்காக செல்லவில்லை.

மக்களும் நண்பர்களும் சாட்சி இல்லாத இந்த கதையை கதைத்து வருகிறீர்கள் சிறுபான்மை இனமான நாம் எமது கண்டி பிரதி நிதியை சாட்சி இல்லாமல் இவ்வாறான கதைகளை பேசுவதை இட்டு வெட்கப்படுகிறோம்.
நாம் வேண்டும் என்றால் அதனை நிரூபித்து காட்டுகின்றோம் நீங்கள் கோமாளி கூட்டணி தலமைகளோடு சேர்த்து மதுபானசாலை அனுபதி பத்திரம் இருந்தால் நிரூபிக்கவும்.

எமது முன்னால் கூட்டணி தலைவர்கள் தான் பெரும்பான்மை அரசியல் வாதிகளின் மதுபானசாலை அனுமதிபத்திரதினை வைத்துக்கொண்டு பெரும்பான்மை அரசியல் வாதிகளோடு சேர்த்து எமது கண்டி தமிழ் பிரதிநிதிதுவத்தை இல்லாது ஒழிக்க இவ்வாரான கதைகளை கட்டி டீல் அரசியல் செய்கின்றனர்.இவர்களின் இந்த செயலை கண்டு நாம் வெட்கப்படுகின்றோம்.
என்றும் கண்டி தமிழ் பிரதிநிதிதுவத்தை உங்கள் டீல் மூலம் இல்லாமல் செய்ய முடியாது என்றும் கூறி கொள்ள விரும்புகிறேன்’.

என கண்டி மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் ஜீவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *