‘டொனால் ட்ரம்ப்’ ற்கு  முன்னால் மீண்டும் துப்பாக்கி பிரயோகம்..!

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளது.இந்நிலையில் குடியரசு கட்சியின் சார்பாக டொனால்ட் ட்ரம் வும் ,ஜனனாயக கட்சியின் சார்பாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வும் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் பென்சில் வேனியாவில் ட்ரம் தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்து கொண்ட போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.அதன் போது மயிரிலையில் அவர் உயிர் தப்பி இருந்தார்.

இந்நிலையில் நேற்று ட்ரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று விளையாடிக்கொண்டிருந்த போது ,அவர் பார்வைக்குட்பட்ட பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *