லெபனானின் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

லெபனானில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.

லெபனானின் தெற்கு பகுதியில் 2006ம் ஆண்டு போருக்கு பிறகு ஐ.நா வால் உருவாக்கப்பட்ட இடையக மண்டலத்திற்கு வடக்கிலுள்ள கிராமங்கள்,மற்றும் நகரங்களில் உள்ள மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை மூலம் இஸ்ரேலானது தனது தாக்குதலை விரிவுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன போரானது ஒரு வருடத்தை அண்மிக்கும் நிலையில் பல்லாயிரக்கணக்காணோர் உயிரிழந்துள்ளனர்.இதில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக லெபனானில இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *