கிரேக் மொகிபேர் இராஜினாமா..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.மற்றும் நீர்,மின்சாரம்,உணவு உள்ளிட்ட அனைத்துவிதமான அம்சங்களையும் பாலஸ்தீனத்திற்கு வழங்க மறுத்துள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்குலக நாடுகள் என்பன பக்கச்சார்பாக நடந்து வருகின்றன என்று தெரிவித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் கிரேக் மொகிபேர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை திணைக்களத்தின் உயர் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளின் நடவடிக்கையால் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *