15 ட்ரோன்களை அமெரிக்கா தாக்கி அழிப்பு..!

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகளுடன் அனுப்பிய 15 டிரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் போர்கப்பல்கள், போர் விமானங்கள் மூலம் குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் ரோந்து பணிகளுக்காக செங்கடலில் தரித்து நின்ற அமெரிக்க கப்பல்களை இலக்காக கொண்டு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.எனினும் குறித்த ஏவுகணைகளை அமெரிக்க போர்கப்பல்கள் தாக்கி அழித்துவிட்டு ஏமனில வான்வெளி தாக்குதல்களை நடத்தி இருந்த நிலையில் தான் குறித்த 15 டிரோன்களையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா,இங்கிலாந்து என்பன செங்கடலில் ரோந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *