முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை..!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தககூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

அரச வர்த்தக்ககூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரிவலிசுந்தர இதனை தெரிவித்துள்ளார்

இதனூடாக பண்டிகைக்காலத்தில் தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு முட்டை விற்பனை செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு 43 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *