பாடசாலை மீது இஸ்ரேல் வான் வெளி தாக்குதல் -200பேர் பலி

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது உக்கிரமான முறையில் தாக்குதல் நடாத்தி வருகிறது.இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.மற்றும் பொது மக்கள் தஞ்சம் புகுந்துள்ள இடம் ,பாடசாலைகள்,வணக்கஸ்தலங்கள் என்பவற்றின் மீதும் அதிகளவில் தாக்குதல் நடாத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக காசா அல்-ஃபகூரா பள்ளி மீது இஸ்ரேலானது குண்டுவீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.இதன் போது சுமார் 200 பேர் கொல்லப்பட்டதாக அல் ஜசீராவின் இமாத் ஜாகவுத் தெரிவித்துள்ளார்.

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஏஜென்சி (UNRWA) மூலம் நடத்தப்படும் அல்-ஃபகுரா பள்ளி மீதே இஸ்ரேலானது விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *