நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..!

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பதுரலிய இலுக்பத்தன பிரதேசத்திலேயே இச்சம்பவமானது பதிவாகியுள்ளது.குறிப்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள உல்லாச விடுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்க்கியே குறித்த 6 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான்.இச்சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை 17 ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுவனானவன் பெற்றோருடன் விடுமுறைக்காக சென்றிருந்த வேளையில் தான் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடரபான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *