நான்காவது மாடியில் இருந்து விழுந்து பெண் மரணம்..!

அண்மை காலமாக அதிகமான மரணங்கள் பதிவாகிவருகின்றன. அந்த வகையில் மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது.

சதுரிகா மதுஷானி என்ற 31 வயது பெண் ,கொழும்பு – கண்டி வீதி யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடிக்கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட மரணத்தில் சந்தேகம் நிலவியதன் காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ்நிலையத்திற்கு அலைத்து வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகறது.

இதே வேளை உயிரிழந்த பெண்ணிற்கும் பெண்ணின் கணவருக்குமிடையில் குறிப்பிட்ட தினத்தில் தகராறு நடந்ததாக , உயிரிழந்த பெண்ணின் 7 வயது நிரம்பிய மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *