வீட்டில் பணிபுரிந்த சிறுமி சடலமாக மீட்பு..!

வீட்டில் பணிப்புரிந்த நிலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான சிறுமியே இன்று (23.07.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி குடும்ப வறுமையின் காரணமாக வீட்டு பணிப்பெண்ணாக இருந்த நிலையில் பல்வேறு அழுத்தங்களை சிறுமி எதிர்கொண்டதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *