பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழப்பு..!

பஸ் விபத்துக்கள் அன்றாடம் உலகில் எங்கோ ஒரு மூலையில் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது.
விபத்துக்களுக்கு மட்டும் பஞ்சமே இல்லாத நிலை தான் காணப்படுகிறது.

நேற்றுக் காலை 9 மணியளவில் சுமார் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பஸ்ஸொன்றே பங்களதேஷ் பரிஷால்- குல்னா நெடுஞ்சாலையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது 17 பேர் உயிரிழந்ததுடன் ,35 பேர் படுகாயமடைந்தனர்.இவர்கள் அனைவரும் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் பஸ்சானது வேக கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் விழுந்துள்ளது.இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *