சிறுமியை கடத்த முயற்சித்தவர் கைது..!

சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாக அண்மைக்காலமாக செய்திகள் வந்திருந்தன.

இதனிடையே
காலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33 வயதான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் உட புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *