மரணசான்றிதழ் பெற சென்ற நபர் ,மரணமானார்..!

மரண சான்றிதழ் வாங்க சென்ற நபர் மரணமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது புலத்சிங்கள பஹல நாரகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

21 வயதுடைய இளைஞன் தனது தந்தையின் மரண சான்றிதழை பெறுவதற்காக புளத்சிங்களவில் இருந்து ஹொரணைக்கு பைக்கில் பயணித்த போது நரகல பள்ளத்தாக்கிற்கு அருகில் உள்ள வளைவில் பைக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை குறித்த பைக்கிள் பயணித்த மற்றைய நபரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப.பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இச்சமபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *