இளைஞர் ஒருவர் கடத்தி கொலை…!

இளைஞர் ஒருவரை கடத்தி சென்று தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குருவிட்ட கொக்கோ விட்ட பகுதியிலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

இளைஞர் ஒருவர் கடத்தி சென்று தடுத்து வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய ,பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த இளைஞர் வனப்பகுதியில் வீழ்ந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து இரத்தினபுரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞர் உயிரிழதுள்ளார்.

32 வயதான கொக்கோவிட்ட பரகடுவ பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரும்பு பொல்லால் தாக்கிய குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த இளைஞர் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும்.கொலையுடன் தொடர்புடையவர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *