இப்படியும் ஒரு மரணம்..!

உயிர் வாழ தான் உணவு சாப்பிடுகிறோம்,அந்த உணவினை அமைதியாக சாப்பிட வேண்டும்.

சில நேரங்களில் சாப்பிடும் போது புரைக்கேறிய தருணங்களும் ஏற்படுகின்றன.

அப்படிபுரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் எனும் 21வயதுடைய இளைஞனே புதன்கிழமை 15ம் திகதி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி உள்ளது.அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது , வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர்.

சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து , இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு,

கொண்டு சென்ற போது இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற உடற்கூற்று பரிசோதனையில் , சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து ,சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *