குடாபிடிய பகுதியில் கொடடூர கொலை செய்தவர் கைது..!

கடந்த 5ம் திகதி கஹட்டகஸ்திகிலிய ,குடாபிடிய பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து கழுத்து வெட்டி சடலமொன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதே பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் ,இறந்தவருக்கும் அவரின் தந்தைக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (25) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன்,இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *