35 ரூபாவிற்கு முட்டைகளை விற்படை செய்ய நடவடிக்கை..!

முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த வாரத்தில் இருந்து 35 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையங்களினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 100,000 முட்டைகளை சந்தைக்கு வெளியிடப்படவுள்ளதாகவும் நளின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இந்நிலையில் ஹோட்டல் பேக்கரிகளுக்கு மட்டுமே இறக்குமதி செய்த முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் சதோச ஊடாக முட்டைகளை சாதாரண விலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *