தண்ணீர் பௌசர் மோதி 6 வயது சிறுவன் பலி

நேற்று தண்ணீர் பௌசரில் மோதுண்டு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.வாழைச்சேனை ஓமனியாமடு பிரதேசத்தில் தண்ணீர் பௌசர் வண்டியை பின்நோக்கி
செலுத்திய போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 15 மற்றும் 6 வயதுடைய இரண்டு சிறுவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 6 வயது சிறுவன் உயிரிழந்தமையை அடுத்து பௌசர் வண்டியின் சாரதி மற்றும் அதன் உதவியாளர் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து பிரதேச மக்களால் குறித்த பௌசர் வண்டிக்கு தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் பிரதேச மக்களால் குறித்த சாரதி உள்ளிட்ட இருவரும் பிடிக்கப்பட்டதுடன் பின்னர் அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் பௌசர் வண்டியின் சாரதியும் அதன் உதவியாளரும் மதுபோதையில் இருந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் காவல்துறையினர் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அப்பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *