இன்றைய காதல்..!

காதல்

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினர் இலகுவில் காதல் வயப்படுபவர்களாக இருக்கிறார்கள்.அப்படி காதலிக்கும் ஆணும் பெண்ணும் குறுகிய காலத்தில் தமது காதலுக்கு முற்று புள்ளி வைத்து விட்டு செல்கின்றனர்.இதில் அதிகமான அன்பை வைத்திருக்கும் ஆணோ, பெண்ணோ தமது காதலன் காதலி பிரிந்த தருணத்தை நினைத்து நினைத்து அழுகின்றனர்.பிரிவினை ஏற்றுக் கொள்ள முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஏன் இவை எல்லாம்…? எதற்காக ….?

உறவுகளே…..! உங்களை உண்மையாக நேசித்து இருந்தால் உங்களை விட்டு உங்கள் காதலன் ,காதலி பிரிந்து இருக்க மாட்டார்கள்.உங்களை பிரிந்து அவர்களால் வாழ முடியும் என்றால் ஏன் உங்களால் வாழமுடியாது..? சற்று சிந்தியுங்கள் ஒவ்வொரு மனிதரும் இவ்வுலகை விட்டு கண்டிப்பாக இறக்க தான் போகிறோம்.ஆகையால் உங்கள் உயிரை நீங்கள் மாய்த்துக்கொள்ளாதீர்கள்.உங்களுக்கு கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *