Face book காதலால் வந்த வினை..!

காதலால் பலர் இன்றும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் .போலியான காதலுக்கு அடிமையாக பலர் உயிரை துறந்து இருக்கிறார்கள் .

பல காதல்களை இவ் உலகமானது கண்டிருக்கிறது.
இருப்பினும் தற்காலத்தில் முகம் தெரியாதவர்களை காதலிக்கிறார்கள்.அதுவும் முகப்புத்தத்தினூடாக காதலிக்கிறார்கள்.

இவ்வாறு காதலிப்பபவர்கள் ஒரு சிலர் கரம் பிடித்து காலம் முழுதும் வாழ்கிறார்கள் ஒரு சிலர் அவ்வாறின்றி காதலித்தவனை அல்லது காதலித்தவளை உடல் ரீதியாக மன ரீதியாக சித்திரவதை செய்கிறார்.இவ்வாறு சித்திரவதை செய்வது உண்மைக் காதல் ஆகுமா..?இதை வாசிப்பவர்கள் சொல்லுங்கள்.

இன்றைய தினம் காதலனால் கத்திக்குத்துக்கு இலக்கான காதலி பற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த 11ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவி தற்போது மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவியின் உடலில் 3 சிறிய வெட்டுக் காயங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தாய் பல வருடங்களாக வெளிநாட்டில் இருப்பதால், சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வசித்து வந்துள்ளார்.

காயமடைந்த சிறுமியின் தந்தை வேலைக்காக வேறு பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டவர் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவி முகநூல் ஊடாக குறித்த நபருடன் அறிமுகமாகி சுமார் ஒரு வருட காலமாக காதல் தொடர்பில் இருந்ததாகவும்,

சிறுமி உறவை நிறுத்தியதால் தான் தாக்கியதாகவும் குறித்த இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வறான நிறைய சம்பவங்கள் ஆங்காங்கே இடம் பெருகின்றன.ஆகவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை உங்கள் கண்காணிப்பில் வளருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *