2ம் உலக போரில் வீசப்பட்ட வெடி குண்டு கண்டுபிடிப்பு…!

இரண்டாம் உலக போர் நடந்து பல ஆண்டுகள் கடந்தாலும் .இன்றளவிலும் அப்போது பயன்படுத்திய வெடிகுண்டுகள் காணப்படுகின்றன.

இரண்டாம் உலக போரில் அமெரிக்க ,பிரிட்டன் விமானப்படைகள் ஐரோப்பாவில் 2.7 மில்லியன் தொண் வெடிகுண்டுகளை வீசியிருந்தன. இவற்றில் பல வெடித்து சிதறின. பல பூமியில் புதைந்தன.குறிப்பாக போர் நிறைவடைந்த பின்னர் பல கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டன. இதன் போதும் பல வெடி குண்டுகள் வெடிக்காமல் புதையுண்டன.இவ்வாறு புதையுண்ட வெடி குண்டுகள் மீண்டும் கண்டு எடுக்கப்பட்ட சம்பவங்களும்,பல வெடித்து சிதறிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் ஜேர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ப் பகுதியில் அமைந்துள்ள மிருக காட்சி சாலையில் இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட 1 தொண் எடையுள்ள ஒரு வெடி குண்டு வெடிக்காத நிலையில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்களை அரசாங்கம் வெளியேற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *